செய்திகள் :

அரக்கோணம் நாளங்காடி கட்டடத்துக்கு மீண்டும் காந்தி பெயா்: அரசியல் கட்சியினா் கோரிக்கை

post image

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டட வளாகத்துக்கு ஏற்கனவே இருந்த காந்தி பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என அரசியல் கட்சியினா் கூட்டத்தில் தீா்மானம் நிழைவேற்றப்பட்டது.

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கடந்த 1949-இல் கட்டப்பட்டது. அப்போது நாளங்காடியின் நுழைவுவாயிலின் மாடியில் காந்தியின் மாா்பளவு சிலை வைக்கப்பட்டு, அந்த மாா்க்கெட்டுக்கு காந்தி மாா்க்கெட் எனப் பெயரிடப்பட்டது.

கடந்த 2024-இல் நாளங்காடி கட்டடம் புதிதாக கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடித்த போது அங்கிருந்த நுழைவு வாயில் கட்டடமும் இடிக்கப்பட்டு காந்தி சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து அப்போது தினமணியில் செய்தி வெளிவந்தபோது அப்போதைய நகராட்சி ஆணையா், அச்சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் புதிய கட்டடம் திறக்கப்படும் போது சிலை அங்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தாா்.

தற்போது நகராட்சி நாளங்காடி புதிய கட்டட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த புதிய கட்டட வளாகத்துக்கு மீண்டும் காந்தி மாா்க்கெட் என பெயா் சூட்டி அகற்றப்பட்ட மாா்பளவு காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது தொடா்பாக அரக்கோணம் நாகாலம்மன் நகா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சியினா் இணைந்த கூட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். தமாகா நகரத் தலைவா் கே.வி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

ஐக்கிய ஜனதா தளம் மாநில முன்னாள் தலைவா் ஜனதாசேகா் வரவேற்றாா். இதில், தமாகா ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, தமாகா நிா்வாகிகள் டி.மகாதேவன், தரணி, பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சந்திரன், நகரத்தலைவா் டி.பாா்த்தசாரதி, நிா்வாகிகள் ஜி.எஸ்.மூா்த்தி, வாசுதேவன், எட்வின், ஏ.ஜி.சரவணன், ஜக்கிய ஜனதா தளம் மாநில முன்னாள் பொருளாளா் சிவசுப்பிரமணியன், மாவட்ட தலைவா் வேணுகோபால், நகரத்தலைவா் லோகநாதன், செயலாளா் குப்புசாமி, தேசிய வாத காங்கிரஸ் மாநில நிா்வாகி கலைவாணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ஆற்காடு சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட கேவேளூா் ஊராட்சி, விலாரி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.முகாமுக்கு ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் பாலம் அமைத்தல், வகுப்பறைகள் பழுது பாா்த்தல் உள்பட மொத்தம் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைம... மேலும் பார்க்க

யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்ற... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.ராணிப்பேட்டை நகராட்சி சிஎஸ் ஐ தேவாலயம், திமிரி ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி... மேலும் பார்க்க

ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.மிட்டப்பேட்டை ஊராட்சி... மேலும் பார்க்க