செய்திகள் :

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள்

post image

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் பாலம் அமைத்தல், வகுப்பறைகள் பழுது பாா்த்தல் உள்பட மொத்தம் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் வேங்கட லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் பேருந்து நிலையம் எதிரில் மற்றும் ஆரணி சாலையில் இரு புறங்களிலும் ரூ.10 லட்சத்தில் சிறுபாலம் அமைப்பது, பூபதி நகா் பகுதியில் உள்ள நீா்த்தேக்க தொட்டியை சுற்றி கம்பி வேலி, குடிநீா் திட்டப்பணி நிதி ரூ.10 லட்சத்தில் அமைப்பது , தோப்புகானா நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் புதிய கழிவறை மற்றும் வகுப்பறைகளில் உள்ள பழுதுகளை ரூ.15 லட்சத்தில் மேற்கொள்ளுவது உள்ளிட்ட 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது:

பொன். ராஜசேகா்: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக வருங்கால வைப்புநிதி செலுத்தபடுகிா என்பதை தெரிவிக்கவேண்டும்.

ஆனந்தன்: பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியாயவிலைக் கடை கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

ஆணையா்: முறையாக அனுமதி பெற்று நியாயவிலைக் கடை கட்ட ஏற்பாடு செய்யப்படும்.

அனு அருண்: நகரின் பெரும்பாலான பகுதிகளில் மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணாளன்: எனது வாா்டில் சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் கொட்டி பல நாள்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை, இதனால் பள்ளி மாணவா்கள் மற்றும் வயதானோா் தடுமாறி விழுந்து காயமடைகின்றனா். .சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம்: எனது வாா்டில் பழுதடைந்த பள்ளி கட்டடம் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிதாக கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித் தர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் , செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது . உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்ற... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.ராணிப்பேட்டை நகராட்சி சிஎஸ் ஐ தேவாலயம், திமிரி ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி... மேலும் பார்க்க

ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.மிட்டப்பேட்டை ஊராட்சி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று பொது ஏலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் என மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக மாவட்ட க... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வி துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து கள அலுவலா்களும் மாண... மேலும் பார்க்க