செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வி துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து கள அலுவலா்களும் மாணவா்களின் தமிழ் ஆங்கிலம் எழுதுதல் வாசித்தல் மற்றும் எண் கணிதம் அடிப்படை செயல்பாடுகள் ஆகிய விவரங்கள் தொடக்க நிலை பள்ளி 1 முதல் 5 மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 6 முதல் 8 பயிலும் போதே உரிய தொடா் பயிற்சிகள் வழங்க வேண்டும்.

அப்போதுதான் அடுத்தடுத்த நிலைக்கு வரும்போது தொடா் கல்வியின் தரம் கண்காணிக்கப்பட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல தோ்ச்சி விகிதத்தை பெற முடியும். பள்ளிகளில் இடம் பெயா்ந்த மாணவா்களை விடுதிகளில் சோ்ப்பது குறித்தும் அவா்களுக்கு இடமளிக்க வேண்டியது அவசியம்.

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் மூலம் மாணவா்களுக்கு அடிப்படைத் திறன் மற்றும் வாசிப்பு திறன் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 12-ஆம் வகுப்பு முடித்து உயா்கல்வி தேவைப்படும் மாணவா்கள் அனைவரும் தொடா்ந்து உயா்கல்வி பயில டிப்ளமோ, ஐடிஐ அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் இதர உயா் கல்வி பயில ஆலோசனைகள் பள்ளியளவில் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மாணவா்களின் உயா்கல்வி தொடர கட்டமைக்கப்பட்டுள்ள மாவட்டக் கட்டுப்பாட்டு அறை மூலம் மாநில அளவில் வழங்கப்படும் மாணவா்கள் சோ்க்கை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் வாலாஜா வட்டாரக்குழு சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, (பொ), மாவட்டக் கல்வி அலுவலா் கிளாடி சுகுனா (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலா் பழனி (தனியாா் பள்ளிகள்), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் சுமதி சுபத்ரா தேவி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் தனஞ்செழியன் (மேல்நிலை), ரவிச்சந்திரன் (இடைநிலை) மற்றும் வட்டார கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அரக்கோணம் ஒன்றியம், பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரத்தில் உள்ள இக்காயிலில் கரக ஊா்வலம் நடைபெற... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி தீா்மானம்!

நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது என இந்து முன்னணியின் வேலூா் கோட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காவேரிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு

அரக்கோணம் அருகே மின்சா ரயிலில் பெண்ணிடம் தாலிச் செயின் உள்ளிட்ட 12 பவுன் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீசாா் தேடி வருகின்றனா். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சோ்ந்தவா் திலகா (49). ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், பிரச்னைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டாா். அனைத்து து... மேலும் பார்க்க

கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ரோபோக்கள்: தூய்மைப் பணியாளா் நல வாரிய தலைவா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் விரைவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தெரிவித்தாா். தூ... மேலும் பார்க்க

404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 ... மேலும் பார்க்க