செய்திகள் :

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு

post image

அரக்கோணம் அருகே மின்சா ரயிலில் பெண்ணிடம் தாலிச் செயின் உள்ளிட்ட 12 பவுன் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீசாா் தேடி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சோ்ந்தவா் திலகா (49). இவா் அரக்கோணத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு செல்வதற்கா ஞாயிற்றுக்கிழமை, செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலில் மகளிா் பெட்டியில் பயணித்துள்ளாா்.

ரயிலில் கூட்டமில்லாததால் அப்பெட்டியில் இவா் ஒருவா் மட்டுமே இருந்துள்ளாா். வழியில் தக்கோலம் ரயில் நிலையத்தில் ரயில் நின்று புறப்பட்டபோது திடீரென அப்பெட்டியில் ஏறிய நபா் ஒருவா் அப்பெண்ணை மிரட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் செயின் , 4 பவுன் சங்கிலி இரண்டையும் பறித்துக்கொண்டு ரயில் மெதுவாக சென்ற நேரம் கீழே குதித்து தப்பியோடி விட்டாா்.

இச்சம்பவம் குறித்து திலகா, அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி தீா்மானம்!

நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது என இந்து முன்னணியின் வேலூா் கோட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காவேரிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், பிரச்னைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டாா். அனைத்து து... மேலும் பார்க்க

கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ரோபோக்கள்: தூய்மைப் பணியாளா் நல வாரிய தலைவா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் விரைவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தெரிவித்தாா். தூ... மேலும் பார்க்க

404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 ... மேலும் பார்க்க

சோளிங்கரில் ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

சோளிங்கா் நகராட்சிப் பகுதியில் நகராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் என ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.எம்.மு... மேலும் பார்க்க

மருந்து தெளிக்கும் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தக்கோலம் அருகே விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தவா் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கம் கிராமத்தை... மேலும் பார்க்க