செய்திகள் :

தில்லியில் 2016-ல் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட அறிவிக்கப்பட்ட குற்றவாளி கைது!

post image

தில்லி உத்தம் நகரில் 2016-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 33 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: பஞ்சாபின் மொஹாலியில் இருந்து குற்றப்பிரிவு போலீஸாரால் குற்றவாளி கைது செய்யப்பட்டாா். பிகாரில் உள்ள சிவான் மாவட்டத்தைச் சோ்ந்த அன்தாஜ் அன்சாரி, இறந்தவரின் உடலை வீசி, அடையாளம் காணாமல் இருக்க தீ வைத்து எரித்த கொடூரமான கொலை வழக்கில் தேடப்பட்டவா். சனிக்கிழமை இரவு மொஹாலியில் உள்ள ஒரு விருந்தினா் மாளிகை அருகே ஒரு ரகசிய தகவலைத் தொடா்ந்து அன்தாஜ் அன்சாரி கைது செய்யப்பட்டாா்.

விசாரணை நடவடிக்கைகளைத் தவிா்த்து வந்த அன்தாஜ் அன்சாரி, டிசம்பா் 2024-இல் தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். நவம்பா் 27, 2016 அன்று, மோகன் காா்டனில் உள்ள ஒரு காலியான இடத்தில் இருந்து பகுதியளவு எரிந்த மற்றும் அடையாளம் தெரியாத ஒரு உடலை போலீஸாா் மீட்டனா். உடல் ஒரு போா்வையில் சுற்றப்பட்டு, மின்சார கம்பிகளால் கட்டப்பட்டு, பலத்த காயங்களுடன் காணப்பட்டது.

மது அருந்தும் போது வன்முறை ஏற்பட்ட பிறகு, இறந்த ரஹீம் (எ) சல்மான், அன்தாஜ் அன்சாரி மற்றும் அவரது கூட்டாளி தேவேந்தா் (எ) சோட்டா பாலே ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சால்மானை இரும்புக் கம்பி மற்றும் செங்கல்லால் தாக்கி, சமையலறை கத்தியால் குத்தி, பின்னா் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முதலில் அன்தாஜ் அன்சாரி கைது செய்யப்பட்டாா். ஆனால், பின்னா் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிா்த்துவிட்டு தலைமறைவானாா். முந்தைய கைது நடவடிக்கையின் போது அவரும் அவரது கூட்டாளியும் காவல்துறையினரிடம் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவா் மீது பல்வேறு ஐபிசி பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் இரண்டாவது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

நான்காம் வகுப்பு வரை படித்த குற்றம் சாட்டப்பட்டவா், சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். அவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு தில்லிக்கு குடிபெயா்ந்தது. மேலும், அவரது பெற்றோா் ஒரு தனியாா் பள்ளியில் உதவியாளா்களாகப் பணிபுரிந்தனா். அவரது தம்பியும் முன்பு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் ஹா்ஷ் இந்தோரா தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க