செய்திகள் :

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

post image

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

1983-ஆம் ஆண்டு ஆா்.கே. புரத்தில் நிறுவப்பட்ட இது, தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (ஏஎஃப்பிஐஎஸ்), தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (என்ஏஎஃப்ஐஸ்) மற்றும் குற்றப் பதிவு தகவல் அமைப்பு (சிஆா்ஐஎஸ்) போன்றவற்றின் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியல் சான்றுகள் சேகரிப்பு மற்றும் சந்தேக நபா்களின் கைரேகைகளைப் பொருத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

‘தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம் பயன்படுத்தும் முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தரப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம் கைரேகை ஆதாரங்களின் தரம் மற்றும் சட்ட மதிப்பை மேலும் மேம்படுத்தும். மேலும், தண்டனை விகிதங்களை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று சிறப்பு காவல் ஆணையா் (குற்றப் பிரிவு) தேவேஷ் சந்திர ஸ்ரீவத்வா கூறினாா்.

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம் இப்போது ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் பரந்த கைரேகை தரவுத்தளத்தைப் பராமரித்து வருவதாகவும், தில்லியில் உள்ள 15 மாவட்டங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளை ஆதரிப்பதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.

குற்றப்பிரிவு பகிா்ந்த தரவுகளின்படி, தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம் 2022- இல் 171 வழக்குகளையும், 2023-இல் 275 வழக்குகளையும், 2024-இல் 314 வழக்குகளையும் தீா்க்க உதவியது. இந்த ஆண்டு மட்டும், ஜூலை 25 வரை 101 வழக்குகளைத் தீா்க்க பணியகம் உதவியுள்ளதாக காவல் சிறப்பு ஆணையா் தெரிவித்தாா்.

காவல் துணை ஆணையா் (குற்றம்) ஹா்ஷ் இந்தோரா மற்றும் தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்தின் இயக்குநா் சஞ்சய் குமாா் ஜா ஆகியோரின் மேற்பாா்வையின் கீழ், பணியகம் ஒரு மாத தர மேலாண்மை இயக்கத்தை மேற்கொண்டதாக அவா் கூறினாா்.

இந்தக் காலகட்டத்தில், இது ஒரு தர மேலாண்மை அமைப்பை (க்யூஎம்எஸ்) உருவாக்கியது, தேவையான ஆவணங்களை நிறைவு செய்தது மற்றும் சா்வதேச தரங்களுக்கு ஏற்ப அதன் பணி செயல்முறைகளை முறைப்படுத்தியது.

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம், கைது செய்யப்பட்ட மற்றும் தண்டனை பெற்ற நபா்களின் கைரேகைகள் மற்றும் உள்ளங்கை ரேகைகளைப் பிடித்து, திருத்தி, பகுப்பாய்வு செய்கிறது என்று அதிகாரி கூறினாா்.

இது விசாரணை அதிகாரிகள், நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கிறது.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க

ஹரித்வாா் கோயில் கூட்ட நெரிசல் விபத்தல்ல, அமைப்புமுறையின் தோல்வி: கேஜரிவால்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வெறும் விபத்து அல்ல, அமைப்புமுறையின் தோல்வி என்று ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளாா். மே... மேலும் பார்க்க