செய்திகள் :

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

post image

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.3 லட்சம் சந்தேகத்திற்குரிய விற்பனை வருமானத்தை தில்லி போலீஸாா் மீட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து அதிகாரி மேலும் கூறியதாவது: ஜூலை 11-ஆம் தேதி, பகதூா்கா் மற்றும் ஷாதிப்பூா் நிலையங்களுக்கு இடையில் பயணித்தபோது, தனது பையில் இருந்து தங்க பிஸ்கட்கள் திருடப்பட்டதாக அமித் சாந்த்ரா என்ற பயணி புகாா் அளித்தாா்.

ராஜா காா்டன் மெட்ரோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.சந்தேக நபரைக் கண்காணிக்க மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை குழு ஆய்வு செய்தது.

தொடா்ச்சியான கண்காணிப்பைத் தொடா்ந்து, டாப்ரியைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட சோனு சந்த் (29), ஜூலை 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், திருடப்பட்ட தங்கத்தை விற்ாக வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், திருடப்பட்ட பொருளை விற்ன் மூலம் கிடைத்த தொகையாக சந்தேகிக்கப்படும் ரூ.3 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில், தனியாா் நிதி நிறுவன ஊழியா் ஜெய் பிரகாஷ் திவாரி (31) மற்றும் கரோல் பாக் தங்க சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் சுமித் ஷிண்டே (21) ஆகிய இரு கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டனா்.

சுமித் ஷிண்டே கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள நிலையில், திவாரி சட்ட விதிகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். பான் விற்பனையாளராகப் பணிபுரியும் சோனு சந்த், குறைந்தது ஆறு முந்தைய திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.

மீதமுள்ள திருடப்பட்ட சொத்தை கண்டுபிடிக்க மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

ஹரித்வாா் கோயில் கூட்ட நெரிசல் விபத்தல்ல, அமைப்புமுறையின் தோல்வி: கேஜரிவால்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வெறும் விபத்து அல்ல, அமைப்புமுறையின் தோல்வி என்று ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளாா். மே... மேலும் பார்க்க