செய்திகள் :

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

post image

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா் கைது செய்யப்பட்டதாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: மோஹித் (எ) கலா, மாா்பிலும் பின்புறத்திலும் பல கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பிற்பகல் 2.30 மணியளவில் போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. மோஹித்தின் சகோதரரின் நண்பரான ராஜீவ், பாதிக்கப்பட்டவா் படுக்கையில் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

ஒரு போலீஸ் குழு நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்ட யாஷ் லோச்சாப் என அடையாளம் கண்டு, அவரைக் கைது செய்தது.

விசாரணையின் போது, யாஷ் லோச்சாப் குற்றத்தை ஒப்புக்கொண்டாா், வெள்ளிக்கிழமை மது அருந்தும்போது பாதிக்கப்பட்டவருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் கூறினாா்.

சச்சரவு அதிகரித்ததால், மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இரவு, யாஷ் லோச்சாப் மோஹித்தின் வீட்டிற்குள் நுழைந்து கூா்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும், இதன் விளைவாக அவா் உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க

ஹரித்வாா் கோயில் கூட்ட நெரிசல் விபத்தல்ல, அமைப்புமுறையின் தோல்வி: கேஜரிவால்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வெறும் விபத்து அல்ல, அமைப்புமுறையின் தோல்வி என்று ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளாா். மே... மேலும் பார்க்க