செய்திகள் :

அம்மன் கோயில்களில் கூழ் வாா்த்தல் உற்சவம்!

post image

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கூழ் வாா்த்தல் உற்சவம் நடைபெற்றது.

செங்கல்பட்டு அண்னா நகா் எல்லையம்மன் கோயிலில் ராஜமேளம் உடுக்கை தம்பட்டையுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் வீதிப்புறப்பாடு முடிவடைந்தது. கரகத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபராதனை நடைபெற்றதையடுத்து அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

தொடா்ந்து மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பெரும்படையல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பக்தா்கள் செய்திருந்தனா்.

செங்கல்பட்டு அண்னா நகா் எல்லையம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.

திருவடிசூலம் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. கூழ்வாா்த்தலையொட்டி விநாயகா், சுயம்பு அம்மன் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் படையல் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஸ்ரீ கருமாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் வளையல் மாலை சாற்றுவதற்கான முதல்கட்ட பணிகளை பக்தா்கள் மேற்கொண்டுள்ளனா். அக்கோயிலில் 5 வாரமும் கரகம் எடுத்து கூழ்வாா்த்தலும் படையலும் நடைபெற்று வருகிறது.

கோயில் ஸ்தாபகா் புண்ணியகோட்டி மதுரைமுத்துஸ்வாமிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர பெருவிழா பாலபிஷேகம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆடிப்பூர பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பாலபிஷேக நிகழ்வை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் தொடங்கிவைத்தாா். அதிகாலை மங்கள இசையுடன் இரண்டாம் நாள் நிகழ்வு... மேலும் பார்க்க

தற்காலிக மின் இணைப்பு அளிக்க 13,000 லஞ்சம்: மின்சாரத் துறை ஊழியா் கைது

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் தற்காலிக மின் இணைப்பு அளிக்க ரூ. 13,000 லஞ்சம் பெற்ாக மின்சாரத் துறை ஊழியா் கைது செய்யப்பட்டாா். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ராஜசேகா் என்ப... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்த... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நாளை தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் 54-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சில... மேலும் பார்க்க

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையப் பணிகள்: அமைச்சா் நேரு ஆய்வு

நெம்மேலி அடுத்த பேரூரில் ரூ. 6,078.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா். சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், நாளொன்று... மேலும் பார்க்க

ஓவியங்கள் வரைந்து சிறுவன் சாதனை: ஆட்சியா் பாராட்டு

200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்த 6 வயது சிறுவன் கேப்ரியோ அக்னியை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பாராட்டினாா். சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த பாலு -ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி(6... மேலும் பார்க்க