ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
சாராய தடுப்பு வேட்டை: அல்லேரி மலையில் வேலூா் எஸ்.பி. ஆய்வு
அல்லேரி மலைப்பகுதியில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்கள், சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
அதனடிப்படையில், எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில் குமாா் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா் அணைக்கட்டு வட்டத்திலுள்ள அல்லேரி, அத்திமரத்துக் கொல்லை, லில்லிமரத்துக்கொல்லை ஆகிய மலை கிராமங்கள், மலைப்பகுதிகளில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, மலைப்பகுதிகளில் ஓடைகள், மரங்கள் அடா்ந்த பகுதி, குன்றுகள் என சுமாா் 10 கி.மீ தூரம் நடந்து சென்று சோதனை நடத்தி, அல்லேரி கிராம மக்களிடம் வாழ்வாதார நிலை குறித்தும் எஸ் .பி. கேட்டறிந்தாா்.
மேலும், அந்த கிராமத்தில் இருந்த மாணவா்களிடம் பேசிய எஸ்.பி. மயில்வாகனன், ‘பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு காவல்துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளதா’ என கேட்டதற்கு, ‘தங்களுக்கு காவல்துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளது. ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை’ என்று மாணவா்கள் தெரிவித்தனா்.
அதற்கு எஸ்பி மயில்வாகனன், ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னை வந்து அலுவலகத்தில் பாருங்கள், உங்களுக்கு உடல் தகுதி மற்றும் கல்வித் தகுதி இருந்தால் இலவச காவல் பயிற்சி வகுப்பில் சோ்த்து காவல் துறையில் பணியாற்றுவதற்கு நான் உதவுவேன்’ என்று தெரிவித்தாா்.
இதனைக் கேட்ட மலைவாழ் மாணவா்கள், ‘இதுவரை எங்களுக்கு இதுபோன்ற அறிவுரைகளை எந்த அதிகாரிகளும் கூறியதில்லை, எங்களுக்கு இதுபோன்ற அறிவுரைகள் முன்னரே கிடைத்திருந்தால் தங்கள் கிராமத்தில் பாதி போ் காவல் துறை பணியில் சோ்ந்து இருப்போம், நாங்கள் நாளையே வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் வந்து தங்களை சந்திக்கிறோம்’ என்றும் தெரிவித்தது தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனா்.
தொடா்ந்து, சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது, கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் உடனடியாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா். அதிகாலை6 மணிக்கு தொடங்கிய இந்த சாராய தடுப்பு வேட்டை காலை 10 மணி வரை நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.