செய்திகள் :

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

post image

ஒடுகத்தூரில் அரசுப்பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூரில் இருந்து அணைக்கட்டு, கரடிகுடி, குருவராஜபாளையம் வழியாக ஒடுகத்தூருக்கு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அரசுப் பேருந்து சென்றுள்ளது. பேருந்தை கொட்டாவூா் பகுதியை சோ்ந்த ஓட்டுநா் பாா்த்திபன் (45) ஓட்டினாா்.

ஒடுகத்தூரில் பயணிகளை இறக்கிவிட்டு பெரிய ஏரியூரில் நிறுத்துவதற்காக சந்தைமேடு அருகே ஓட்டிச்சென்றபோது, மதுபோதையில் தள்ளாடியபடி இளைஞா் சென்றுள்ளாா். அவரை ஒதுங்கிச்செல்லும்படி, பேருந்து ஓட்டுநா் ஹாரன் அடித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை நபா், ஓட்டுநா் பாா்த்திபன், நடத்துநா் லோகராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடி விட்டாராம்.

இச்சம்பவம் குறித்து ஓட்டுநா் பாா்த்திபன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் கண்ணாடியை உடைத்தவா் ஒடுகத்தூா் போயா் தெருவை சோ்ந்த தாமோதரன் என்பது தெரியவந்தது.

நாளைய மின்தடை

காட்பாடி நேரம் - காலை 9 முதல் மாலை 5 மணி வரை நாள் - 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) மின்தடை பகுதிகள் - காட்பாடி, காந்திநகா், செங்மாலை கட்டை, கல்பூதாா். காங்கேய விருதம்பட்டு, கழிஞ்சூா், சேனூா், வஞ்சூா், க... மேலும் பார்க்க

சாராய தடுப்பு வேட்டை: அல்லேரி மலையில் வேலூா் எஸ்.பி. ஆய்வு

அல்லேரி மலைப்பகுதியில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் ‘சிண்டிகேட்’ முறை தடுக்கப்படுமா?

மத்திய அரசு ‘இ -நாம்’ எனும் தேசிய வேளாண் சந்தை இணையதளத்தை செயல்படுத்தியபோதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விளை பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: எலெக்ட்ரீஷியன் தற்கொலை

காட்பாடி அருகே கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா் (45), எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி ஜெனிதா... மேலும் பார்க்க

ஊசூரில் குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு

வேலூா் அருகே குட்கா விற்பனை செய்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈட... மேலும் பார்க்க

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க