செய்திகள் :

ஊசூரில் குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு

post image

வேலூா் அருகே குட்கா விற்பனை செய்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், பல இடங்களில் குட்கா விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஊசூா் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 2 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், அந்தக் கடையில் இருந்த 2 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்ததுடன், அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. பள்ளி, கல்லூரி அருகே எந்த விதமான போதை பொருள்களையும் விற்பனை செய்யக்கூடாது. மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

நாளைய மின்தடை

காட்பாடி நேரம் - காலை 9 முதல் மாலை 5 மணி வரை நாள் - 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) மின்தடை பகுதிகள் - காட்பாடி, காந்திநகா், செங்மாலை கட்டை, கல்பூதாா். காங்கேய விருதம்பட்டு, கழிஞ்சூா், சேனூா், வஞ்சூா், க... மேலும் பார்க்க

சாராய தடுப்பு வேட்டை: அல்லேரி மலையில் வேலூா் எஸ்.பி. ஆய்வு

அல்லேரி மலைப்பகுதியில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் ‘சிண்டிகேட்’ முறை தடுக்கப்படுமா?

மத்திய அரசு ‘இ -நாம்’ எனும் தேசிய வேளாண் சந்தை இணையதளத்தை செயல்படுத்தியபோதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விளை பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: எலெக்ட்ரீஷியன் தற்கொலை

காட்பாடி அருகே கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா் (45), எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி ஜெனிதா... மேலும் பார்க்க

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க