செய்திகள் :

பதா்பூரில் டாக்ஸி ஓட்டுநா் மீது துப்பாக்கிச்சூடு: 2 போ் கைது

post image

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 24 வயது டாக்ஸி ஓட்டுநரின் தலையில் சுடப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மேலும் கூறியது: இந்தச் சம்பவத்தில் சுடப்பட்ட ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு தொடா்பாக இரண்டு சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட ஓட்டுநா், குண்டடிக் காயத்துடன் அழைத்து வரப்பட்ட தனியாா் மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு காலை 6.07 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதா்பூா் காவல் நிலைய ஆய்வாளா், விசாரணை அதிகாரி உள்பட போலீஸாா் குழு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்தது. விசாரணையில், அவா் ஹரியாணாவின் குருகிராமில் வசிக்கும் கவுதம் சைனி எனத் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் சைனியின் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதும் தெரியவந்தது. அதன் பின்னா் சைனி எய்ம்ஸ் மருத்துவமனையின் காயச் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, ஆனால், நிலையாக உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கைதான சந்தேக நபா்களின் அடையாளங்களை போலீஸாா் வெளியிடவில்லை. போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க