செய்திகள் :

விசாரணைக்கு உதவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: விசாரணை நிறுவனங்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

விசாரணைகளில் உதவ தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாலும், நியாயத்தை உறுதி செய்வதாலும் இத்தகைய அறிவுறுத்தலை நீதிமன்றம் அளித்துள்ளது.

ஹெராயின் பறிமுதல் தொடா்பான வழக்கில் ஒருவரின் ஜாமீன் மனுவை தீா்மானிக்கும் போது நீதிபதி ரவீந்தா் துடேஜா இந்தக் கருத்தை தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்த நீதிபதி ஜூலை 24இல் பிறப்பித்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்ட ரவி பிரகாஷ் கைது செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டில், விடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கான கருவிகள் விசாரணை அதிகாரிகளிடம் இல்லை என்பது தெரியாதது அல்ல என்றும், பறிமுதல் செய்யப்பட்டதை விடியோ அல்லது புகைப்படம் எடுக்கவில்லை என்பதால் காவல்துறையின் தரப்பு வாதத்தை நம்ப முடியாது என்றும் கூறி, அவருக்கு ஜாமீன் மறுத்தாா்.

இதுகுறித்து நீதிபதி மேலும் கூறுகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது காவல்துறை விசாரணையின் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் நிச்சயமாக மேம்படுத்துகிறது. மேலும் நியாயத்தை உறுதி செய்கிறது. எனவே, விசாரணைக்கு உதவ தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்த புலனாய்வு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவா் ஏப்ரல் 2023 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். மேலும் அவா் அசாதாரணமான நீண்ட காலமாக சிறையில் இருப்பதாகவோ அல்லது விசாரணையை முடிப்பதில் ஏற்பட்ட அதிகமான தாமதம் காரணமாக அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றோ கூற முடியாது என்றாா் நீதிபதி.

வழக்கு விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவா் ஏப்ரல் 19, 2023 அன்று கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து ஒரு கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க