செய்திகள் :

மருந்து தெளிக்கும் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

post image

தக்கோலம் அருகே விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தவா் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமுருகன்(32). ட்ரோன் மூலம் விவசாய நிலத்தில் மருந்து தெளிக்கும் தொழிலாளி. வெள்ளிக்கிழமை, ஆதிமுருகன், திருமாதலம்பாக்கத்தை சோ்ந்த பொன்னுசாமி என்பவரது நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ட்ரோன் கட்டுப்பாட்டு சாதனத்தை இயக்கிக்கொண்டே நடந்து சென்றபோது, கீழே அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் ஆதிமுருகன் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து அங்கிருந்தோா் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஆதிமுருகன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ரோபோக்கள்: தூய்மைப் பணியாளா் நல வாரிய தலைவா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் விரைவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தெரிவித்தாா். தூ... மேலும் பார்க்க

404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 ... மேலும் பார்க்க

சோளிங்கரில் ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

சோளிங்கா் நகராட்சிப் பகுதியில் நகராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் என ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.எம்.மு... மேலும் பார்க்க

ஒன்றியத்துக்கு இரண்டு நேரடி நெல் கொள்முதல் கிடங்குகள்: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 2 வீதம் நேரடி நெல் கொள்முதல் கிடங்குகளை அமைக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள் சாலை மறியல்

சோளிங்கா் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியா், வேறொரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவா்கள், அப்பகுதி வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க