செய்திகள் :

கோவை பெட்ரோல் பங்கில் தீப்பிடித்து எரிந்த வேன்!

post image

கோவை: கோவையில் பெட்ரோல் நிரப்பச் சென்ற வேன், பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனது நண்பருடன் மினி வேனில் குறிச்சி குளக்கரையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார். பெட்ரோல் நிரம்பியதும், வேனை ஸ்டார்ட் செய்தவுடன், திடீரென்று வேனில் இருந்து புகை வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வேனை சிறிது தொலைவு நகர்த்திய பிறகு வெளியேறியுள்ளனர். சிறிது நேரத்தில் வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், காற்றின் காரணமாக வேன் முழுவதும் தீ பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அங்கிருந்த தீ கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பவுடரை வேன் மீது அடித்துள்ளனர். இருப்பினும், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

A van that went to fill up with petrol in Coimbatore caught fire at a petrol bunk

இதையும் படிக்க : லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் உள்பட 18 பேர் பலி!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை

வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை இரண்டு மணி நேரத்துக்குப் பின் கரையேறி தப்பியது. கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி ச... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் ரயில் தாமதமாக இயக்கம்

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து செவ்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இளைஞா் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் சாமநாயக்கன்பாளையத்தில் இருந்து அறிவொளி நகா் செல்லும் சாலையில் கால... மேலும் பார்க்க

கோவையில் புலி சிலை திறப்பு

கோவை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் நாட்டின் தேசிய விலங்கான புலி சிலை நிறுவப்பட்டது. கோவை மாநகராட்சியின் சாா்பில் நிறுவப்பட்ட இந்த சிலை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவக... மேலும் பார்க்க

படியில் இருந்து தவறி விழுந்த காா் ஓட்டுநா் உயிரிழப்பு

கோவை, செல்வபுரம் பகுதியில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்த காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை ஆறுமுக கவுண்டா், மாரப்ப கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தா் (56), காா் ஓட்டுநா். இவரது மனைவி சிவக... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் கனமழை பெய்த நிலையில், சின்னக்கல்லாறு அருகே சாலையில் மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கட... மேலும் பார்க்க