செய்திகள் :

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

post image

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், போலந்து நாட்டின் லூப்பின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் J. வாசின்ஸ்கி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் E. அருணாசலம் இரண்டு சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Complex High Risk Angioplasty) நோயாளிகளுக்கு லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார்.

இந்த பயிலரங்கில், இரத்தக்குழாய்களில் உள்ள இரத்த உரைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் கதிர்களை உமிழ்கின்ற சிறப்பு கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம், ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இலக்கு பகுதிகளுக்கு மட்டும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது. இந்தியாவில் ட்ரான்ஸ்-கதீட்டர் செயல்முறையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைமை இருதய மருத்துவர் டாக்டர் I.அருணாசலம் கூறுகையில், “எங்கள் பகுதியில் முதல் முறையாக லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இது எங்கள் நோயாளிகளுக்கு உலகத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கு ஒரு முக்கியமான படியாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்தி, அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை இந்தியாவின் முன்னணி இதய சிகிச்சை நிலையமாக வளர்ந்து, அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்.”

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹோட்டல் ஆப்பிள் ட்ரீ-யில் நடைபெற்ற லேசர் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னணி இருதய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு, இதயவியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், மருத்துவ முன்னேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.

அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உயர்தர இதய சிகிச்சையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது.

உதகை: அரசு மருத்துவமனையில் பேட்டரி சேவை அறிமுகம்!

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில், கல்லூரியின் நிதியில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனம், நுழைவாயிலிலிருந்து ஓ.பி பிளாக் வரை செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவை, நிர்வாகம் சார்பில... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என்மகனுக்கு 22 வயதாகிறது. அவனுக்குபைக் ஓட்டுவதில் அலாதி ஆர்வம். ஃபேன்சி பைக் வைத்திருக்கிறான். வார இறுதி நாள்களில் நண்பர்களோடுசேர்ந்து நீண்ட தூரம் பைக் ரைடு செல்கிறான். அப்படிச்செல்வது... மேலும் பார்க்க

புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் - ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோயை எதிர்க்கும் உலகளாவிய தடுப்பூசி உருவாக்குவதில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்த ஆய்வு, எலிகளில் நடத்தப்பட்டதாக நேச்சர் பயோமெ... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கும் ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?

Doctor Vikatan:குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்..எப்படிக் கொடுக்கலாம்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர்லேகாஸ்ரீதரன்ஊட்டச்சத்... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'Chronic Venous Insufficiency' நோய் - ட்ரம்பின் பெர்சனல் மருத்துவர் கூறுவது என்ன?

வெள்ளை மாளிகையின் அறிக்கை படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'Chronic Venous Insufficiency' என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், "சமீபத்திய வா... மேலும் பார்க்க

ஒவ்வொரு மாதமும் பெரிதாகும் மார்பகங்கள்; 22 வயது பெண்ணின் அரிய வகை பாதிப்பு; மருத்துவர்கள் விளக்கம்

பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை அவரின் மார்பகங்கள் அளவில் பெரிதாகியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் கடுமையான வலியால்... மேலும் பார்க்க