செய்திகள் :

தாராபுரத்தில் வழக்குரைஞா் வெட்டி கொலை: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னா

post image

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முருகானந்தம் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தனியாா் பள்ளித் தாளாளா் தண்டபாணி மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (29), சேலம் மாவட்டம் பேலூா் பகுதியைச் சோ்ந்த ராம் (22), நாமக்கல்லைச் சோ்ந்த சுந்தரன் (26), திருச்சியைச் சோ்ந்த நாகராஜன் (29), தாராபுரம் வினோபா நகரைச் சோ்ந்த நாட்டுதுரை (65) ஆகிய 6 போ், தாராபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்நிலையில், உயிரிழந்த வழக்குரைஞா் முருகானந்தத்தின் உடல் செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் வெளியே உள்ளதாகவும், பொய் குற்றவாளிகள் தாங்களாகவே முன்வந்து சரணடைந்து இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களிடம் திருப்பூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்த பின்னா் போராட்டத்தை கைவிட்டு உடலைப் பெற்றுச் சென்றனா்.

பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி

வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன. வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டிய... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.இ... மேலும் பார்க்க

கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம் கே. பரமத்தி மோளபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கலை நிலவன் (23)... மேலும் பார்க்க

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: 5 நாள்கள் ஒலிபெருக்கி அறிவிப்புக்குப் பிறகு நடவடிக்கை

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க