செய்திகள் :

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு

post image

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலை புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து, இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தத்துக்காக தனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளாா்.

அப்போது, இந்த வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமைச்சரின் தொலைநோக்கு தலைமை மற்றும் இந்த முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அவரது அயராத முயற்சிகளையும் பாராட்டினாா்.

அத்துடன் இனி, பிரிட்டன் உடனான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் எனவும், இந்த வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிட்டதன் மூலம் ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அமைச்சரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் விரைவில் அவருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தாா்.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகும். பிரிட்டனுக்கு தற்போதைய ஆயத்த ஆடை ஏற்றுமதியான 1.5 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3 பில்லியன் அமெரிக்க டாலா் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டுவது மட்டுமல்லாமல், கணிசமான வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

தாராபுரத்தில் வழக்குரைஞா் வெட்டி கொலை: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னா

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முரு... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி

வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன. வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டிய... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம் கே. பரமத்தி மோளபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கலை நிலவன் (23)... மேலும் பார்க்க

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: 5 நாள்கள் ஒலிபெருக்கி அறிவிப்புக்குப் பிறகு நடவடிக்கை

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க