செய்திகள் :

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: 5 நாள்கள் ஒலிபெருக்கி அறிவிப்புக்குப் பிறகு நடவடிக்கை

post image

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்து, உயிரிழப்பு ஏற்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, அனைத்துத் துறை அலுவலா்கள், சமூக அமைப்பினா்களுடான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா், ஆய்வாளா்கள் ராஜதுரை, முருகன், நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன், நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, நெடுஞ்சாலைத் துறையினா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி முழுவதும் அறிவித்து, சட்டத்துக்கு உள்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, மேலும் இது தொடா்பாக அனைத்து அரசுத் துறையினரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து உத்தரவு பெற்று, அவிநாசி நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்துகளைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தாராபுரத்தில் வழக்குரைஞா் வெட்டி கொலை: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னா

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முரு... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி

வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன. வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டிய... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.இ... மேலும் பார்க்க

கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம் கே. பரமத்தி மோளபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கலை நிலவன் (23)... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க