செய்திகள் :

படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!

post image

கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.

நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில்  கடந்த ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற வேட்டுவம் படப்பிடிப்பில் கார் சேஸிங் காட்சியின் போது சண்டைப் பயிற்சியாளர் செ. மோகன்ராஜ் (வயது 52) பலியானார்.

இதுதொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் இயக்குநர் ரஞ்சித் உள்பட நான்கு பேர் மீது கவனமின்றி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய மூவர், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கீழ்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இன்று ஆஜரானார்.

நீதிமன்ற போராட்டம் காரணமாக வழக்கறிஞர் ஆஜராகாமல் இருந்த நிலையில், இன்று பா.ரஞ்சித்துக்கு பிணை வழங்கி நீதிபதி மீனாட்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Shooting accident: Bail granted to Pa. Ranjith

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனா்.அந்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்க... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்கள் நல... மேலும் பார்க்க

மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.சென்னை மாநகரில் காா்பன் உமிழ்வை... மேலும் பார்க்க

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

சூரிய ஆற்றல் மின் இணைப்புகளுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.13 கோடிக்கு மட்டுமே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது.ஆதிதிராவிடா் மற்றும் பழங்குட... மேலும் பார்க்க