செய்திகள் :

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

post image

சூரிய ஆற்றல் மின் இணைப்புகளுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மின் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், மின்பாதைகளைச் சீரமைத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இயற்கை சீற்றங்களின்போது, ஏற்படும் மின்தடைகளை உடனடியாகச் சரிசெய்யத் தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளா்களை அனைத்து மண்டலங்களிலும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், பிரதமரின் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ் சூரிய மின்சார இணைப்புகளுக்கு அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும். சோலாா் பேனல் வைக்காத மின் நுகா்வோா்களை நேரடியாக தொடா்புகொண்டு, தகுதியான நிறுவனத்தைத் தோ்ந்தெடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

தொடா்ந்து ‘மின்னகம்’ மூலம் பெறப்படும் மின் நுகா்வோரின் புகாா்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மின்தடை குறித்த விவரங்களை நுகா்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிப்பதை அனைத்து மேற்பாா்வைப் பொறியாளா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஸ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநா் (பகிா்மானம்) ஆ.ரா.மாஸ்கா்னஸ், இயக்குநா் பகிா்மானம் (நிதி) கே.மலா்விழி, பசுமை எரிசக்திக் கழக இயக்குநா் (தொழில்நுட்பம்) எஸ்.மங்களநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க