செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

post image

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை, அடையாறு பூங்காவில் இன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியினர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று மாலை திடீரென சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவருடன் சந்திப்பு நடத்தினார். ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்.

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் முதல்வரைச் சந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் சந்தித்துள்ளதால், அவர் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

O. Panneerselvam at Chief Minister Stalin's house! Alliance with DMK?

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத... மேலும் பார்க்க

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ம... மேலும் பார்க்க

4 வயது சிறுவனைக் கவ்விச் சென்ற புலி: வால்பாறையில் அதிர்ச்சி!

வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனின் தலையைப் புலி கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்த... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப... மேலும் பார்க்க

கவின் உடல் ஒப்படைப்பு! இன்று தகனம்!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடல் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த... மேலும் பார்க்க