ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய நவாஸ்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 178/6 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 164/7 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில், ஜான்சன் சார்லஸ் மற்றும் ஜுவெல் ஆண்ரிவ் தலா 35 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள், சைம் அயூப் 2 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக விளையாடினர்.
முதல் 3 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்த நவாஸ் தான் வீசிய நான்காவது ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

பேட்டிங், பௌலிங் என அசத்திய சைம் அயூப் ஆட்டநாயகானாக தேர்வானார். 8-0 என ஆஸ்திரேலியாவிடம் தோற்ற மே.இ.தீ. அணிக்கு சோகம் தொடர்கிறது.