செய்திகள் :

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்

post image

பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை நேரில் சென்ற வைகோ, அவரிடம் நலம்விசாரித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக எம்பி துரை வைகோ உடனிருந்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது:

”முதல்வர் ஸ்டாலினுக்கு பயப்படக் கூடிய பிரச்னை எதுவும் இல்லை. சிறந்த மருத்துவர்களால் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார். மருத்துவமனையிலும் அலுவலகப் பணிகளை மேற்கொண்டார்.

ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளியையும் அவரது தந்தையையும் கைது செய்து தமிழக அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி அரசு அமையாது. தமிழகமும் அதனை ஏற்றுக்கொள்ளாது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக தனிப் பெரும்பான்மை பெறும். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.

பெரியார் மற்றும் அண்ணாவின் மண்ணில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக போன்ற ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இடமில்லை. அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மதிமுக வெளியேறும் என அப்பட்டமாக செய்தி பரப்புகிறார்கள். முதல்வரை ஓபிஎஸ் சந்தித்தது அரசியல் காரணங்களுக்காக இருக்காது என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வைகோவை சந்தித்த படத்தை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “என் நலம் விசாரித்து அன்புகொண்டு பேசிய அண்ணன் வைகோவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MDMK General Secretary Vaiko has said that they will never form an alliance with the Bharatiya Janata Party and Hindutva organizations.

இதையும் படிக்க : இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க

427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய... மேலும் பார்க்க

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட... மேலும் பார்க்க