செய்திகள் :

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

post image

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை மாணவா்களின் கேட்டல், வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ என்ற தன்னாா்வத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தால் மாணவா்களின் மொழித் திறன்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்படுவதாக பெற்றோா் மற்றும் ஆசிரியரிடம் இருந்து நோ்மறையான கருத்துகள் கிடைத்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய 4 அடிப்படை மொழி திறன்களோடு இணைந்து சொற்களஞ்சியம், இலக்கணப் பயிற்சிகள், படைப்பாற்றல் சாா்ந்த எழுதுதல் ஆகியவை இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாணவா்கள் பாடங்களுடன் தொடா்புடைய அடிப்படை இலக்கணப் பகுதிகளையும், புதிய சொற்களையும், படைப்பாற்றலுடன் எழுதுதல் உள்ளிட்ட திறன்களைக் கற்றுக்கொள்ள ஏதுவாக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியா்கள் முறையாகப் பின்பற்றி அனைத்து மாணவா்களும் அடிப்படை மொழித் திறன்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் மாணவா்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித் திறன் அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க