செய்திகள் :

பின்லாந்து: வாத்துகளால் நெருக்கடியில் உள்ள பிரபல சுற்றுலா இடம் - பின்னணி என்ன?

post image

ஹைட்சுபின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கியில் அமைந்துள்ள ஹைட்சு கடற்கரை பிரபலமான கடற்கரையாகும்.

ஆனால் தற்போது இந்த பிரபலமான கடற்கரை ஒரு எதிர்பாராத சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாத்துகள் இந்த கடற்கரையை தங்கள் கோடைகால தங்குமிடமாக தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் கடற்கரை எச்சங்கள் நிறைந்த இடமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

ஹியெட்சு கடற்கரை, நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக விளங்குகிறது.

ஆனால் வாத்துகள் இந்த கடற்கரையை தங்கள் கோடைகால தங்குமிடமாக தேர்ந்தெடுத்துள்ளதால், அந்த இடமே எச்சங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன.

இது கடற்கரையின் அழகை பாதிப்பது மட்டுமல்லாமல், பாக்டீரியாக்களை பரப்பி பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

ஹெல்சின்கியின் பொது கடற்கரைகளின் மேலாளர் ஜுக்கா லுண்ட்கிரென் கூறுகையில், "சில பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 40 பவுண்டு வாத்து எச்சம் குவிகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த பிரச்னையை சமாளிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் துப்புரவு முறைகள் போதுமானதாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.

இந்த பிரச்னையை தீர்க்க, நகர அதிகாரிகள் பல புதுமையான முறைகளை முயற்சித்திருக்கின்றனர். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலைமை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பங்கள் இந்த கடற்கரைக்கு வரும்போது அங்கு துண்டு விரித்து அமர்வதற்கு முன் மணலை சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

நிலையான தீர்வுகளை தேடும் ஹெல்சின்கி

சுற்றுச்சூழல் நிபுணர்கள் நிலையான தீர்வுகளை விவாதித்து வருகின்றனர்.

ஹெல்சின்கி அதிகாரிகள், இந்த பிரச்னை எதிர்கால கோடைகாலங்களில் மோசமடையாமல் இருக்க, நிலையான தீர்வுகளை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லஞ்சரோன் என்ற சிறிய நகரத்தில், 1999ஆம் ஆண்டு முதல் மரணிப்பது "சட்டவிரோதம்" என்ற வினோதமான விதி அமலில் உள்ளது. அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, நகரின் மயானத்தில் இடப்பற்றா... மேலும் பார்க்க

சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?

தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலரு... மேலும் பார்க்க

பாங்காங் ஏரியின் நிறங்கள்! - சிலிர்க்க வைத்த காட்சி |திசையெலாம் பனி- 9

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைப... மேலும் பார்க்க

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி தான் சொல்லப்போகிறோம்.எமரால்டு ஏரி இந்த ஏரி, எமரால்டு க... மேலும் பார்க்க

வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்?

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, வெறும் ஒரு யூரோவுக்கு (தோராயமாக 100 ரூபாய்) வீடுகளை விற்பனை செய்யும் தனித்... மேலும் பார்க்க