செய்திகள் :

சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?

post image

தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலருக்கும் தெரியாது. அப்படி சுற்றுலா அல்லது மசாஜ் பார்லர்கள் இல்லாமல் தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் ஆதாரம் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

சுற்றுலாவின் பங்களிப்பு

2024 ஆம் ஆண்டில் மட்டும் தாய்லாந்து 3.5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, சுமார் 48 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.

தாய்லாந்து உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடு

சுற்றுலா தவிர ஜாஸ்மின் என்ற அரிசி உலகெங்கும் உள்ள வீடுகளுக்கும் உணவகங்களுக்கும் செல்கிறது. நாட்டின் 30 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ரப்பர், மக்காச்சோளம், இறால், கணவாய், மற்றும் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுகளையும் தாய்லாந்து அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இவை கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி ஏற்றுமதி சந்தையை செழிக்கச் செய்கின்றன.

தாய்லாந்து ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது. டொயோட்டா, ஹோண்டா, ஃபோர்டு போன்ற ஜப்பான், அமெரிக்க, ஐரோப்பிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்கு பெரிய உற்பத்தி ஆலைகளை இயக்குகின்றன.

தாய்லாந்து, வாகனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. மின்னணு பொருட்கள், கணினி வன்பொருள், மற்றும் ஜவுளி ஆகியவையும் தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாய்லாந்தின் பொருளாதாரத்தில் 60 சதவீதம் ஏற்றுமதியிலிருந்து வருகிறது. விவசாயப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் என சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நாட்டின் முக்கிய பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது.

சுற்றுலா, இரவு வாழ்க்கை என்ற பிம்பத்தைத் தாண்டி, தாய்லாந்தின் பொருளாதாரம் விவசாயம், தொழில்துறை, மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை சார்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லஞ்சரோன் என்ற சிறிய நகரத்தில், 1999ஆம் ஆண்டு முதல் மரணிப்பது "சட்டவிரோதம்" என்ற வினோதமான விதி அமலில் உள்ளது. அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, நகரின் மயானத்தில் இடப்பற்றா... மேலும் பார்க்க

பாங்காங் ஏரியின் நிறங்கள்! - சிலிர்க்க வைத்த காட்சி |திசையெலாம் பனி- 9

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைப... மேலும் பார்க்க

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி தான் சொல்லப்போகிறோம்.எமரால்டு ஏரி இந்த ஏரி, எமரால்டு க... மேலும் பார்க்க

வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்?

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, வெறும் ஒரு யூரோவுக்கு (தோராயமாக 100 ரூபாய்) வீடுகளை விற்பனை செய்யும் தனித்... மேலும் பார்க்க

சதுரகிரி: `கொள்ளை அழகு!' - மிஸ் பண்ணவேகூடாத வழித்தடம் | Photo Album

இயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி ... மேலும் பார்க்க