செய்திகள் :

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!

post image

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் பயணம் மேற்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நாள்தோறும் வரவேற்பு அதிகரித்து வருகின்றன.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், முதல்முறையாக ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகளைக் கையாண்டு சென்னை மெட்ரோ சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1,03,78,835 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளது புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் இடையே நீல வழித்தடத்திலும் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர், இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

The Chennai Metro administration announced on Friday that one crore passengers travelled on the train in July alone.

இதையும் படிக்க | அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சரிவில் இந்திய பங்குச் சந்தை!

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க