செய்திகள் :

தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவல்!

post image

பொதுவாக காக்கைகள் நம் அன்றாட பார்க்கக்கூடிய ஒரு பறவை இனமாகும். இவை மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக அறிவாற்றல் திறனுக்காக தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட நபர்கள் காகத்தை ஏதேனும் தொந்தரவு செய்தாலோ அல்லது அன்பாக உணவு பரிமாறினாலோ அதனை காக்கைகள் நினைவில் கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காகங்களால் மனித முகங்களை பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருக்க முடியும் என்றும் தங்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்தவர்களையும் அன்பாக நடத்தியவர்களையும் வேறுபடுத்தி அறிய முடியும் என்றும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கோர்விடே என்ற இனத்தைச் சேர்ந்த காகங்கள் உணர்ச்சி மற்றும் அறிவாற்றலுக்காக பெயர் பெற்றவையாக விளங்குகின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்ஸ்லைஃப் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் காக்கைகள் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கடந்த கால நினைவுகளுடன் தொடர்புபடுத்துவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

எப்படி சாத்தியம்?

2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் ’குகை மனிதன்’ முகமூடி அணிந்து பல காக்கைகளைப் பிடித்து அவற்றிற்கு அடையாளம் காணும் வகை ஒரு குறியீடு செய்கிறார். பின்னர் அந்த முகமூடியை அணிந்த எவரையும் அல்லது வேறு யார் முகமூடி அணிந்திருந்தாலும் காக்கைகள் கடுமையாக தாக்கி கூட்டமாக எதிர்த்துள்ளன.

சாதாரணமாக இருப்பவர்களை அவை புறக்கணித்துள்ளன. இந்த சோதனை கிட்டத்தட்ட 2.7 ஆண்டுகள் நீடித்துள்ளன. பிடிக்கப்படாத காக்கைகளும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு காக்கைகளிடம் நடத்தப்பட்ட மூளை பரிசோதனைகளில் இந்த நடத்தை நரம்பியல் அடிப்படையிலானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு முகமூடி அணிபவர்களை பார்க்கும்போது அவைகளுக்கு மூளையில் பயத்துடன் தொடர்புடைய பகுதிகள் செயல்பட்டுள்ளன. இதிலிருந்து தான் காக்கைகள் தாக்குதலில் ஈடுபட தூண்டப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

காக்கைகள் எதிர்மறையான அனுபவங்களை மட்டும் தான் நினைவில் கொள்ளுமா? என்று கேட்டால், நேர்மறையான அனுபவங்களையும் அவை நினைவில் வைத்திருக்கின்றன. உணவு வழங்கிய அல்லது அச்சுறுத்தாத நபர்களை சந்திக்கும் போது அவை அமைதியாக அருகில் இருக்கின்றன. சில சமயங்களில் காக்கைகள் அன்பானவர்களுக்கு அவை தூக்கி வரும் பொருள்களை, பரிசாக அங்கே விட்டு செல்வதாகவும் அந்த ஆராய்ச்சி குழு தெரிவிக்கின்றது.

கேரள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பதில் மழைக்கால விடுமுறை - புதிய விவாதம்; நீங்க என்ன நினைக்குறீங்க?

நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேசமயம் மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதும... மேலும் பார்க்க

Tiger Day: முதுமலையில் 28 சதவிகிதமாக உயர்ந்த புலிகளின் எண்ணிக்கை - துளிர்க்கும் நம்பிக்கை!

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29- ம் தேதி, சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவசியம் குறித்... மேலும் பார்க்க

World Tiger Day: புலியின் உறுமலே காட்டின் மொழி... புலியே மெய்யான வனக்காவலன்! - ஏன் தெரியுமா?

இன்று (ஜூலை 29-ம் தேதி) சர்வதேச புலிகள் தினம். புலிகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இந்தியா, வங்கதேசம், ... மேலும் பார்க்க

தென்காசி: `நாங்க ட்ரக்கிங் போனோமே!' அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வனத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 8, 9,10ஆம் வகுப்பு அரச... மேலும் பார்க்க

தாவரங்கள் வலிக்கிறது என்று சொன்னால் பூச்சிகள் விலகிச் செல்லுமா? - ஆச்சர்ய தகவல்

தக்காளிச்செடி ஒன்று நீர்ச்சத்துக்குறைவு பிரச்னையில் இருக்கிறது. இது தெரியாமல், பெண் அந்துப்பூச்சி ஒன்று, அந்தத் தக்காளிச் செடியின் இலை ஒன்றில் தன் மூட்டைகளைஇடும் எண்ணத்துடன் வருகிறது. அப்படிவருகையில்,... மேலும் பார்க்க

Nagam App: வீட்டிற்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க தமிழக அரசின் செயலி; பயன்படுத்துவது எப்படி?

தமிழ்நாடு மாநில வனவிலங்கு ஆணையம், பாம்புகளைப் பாதுகாப்பாக மீட்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் "நாகம்" என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி, மனிதர்களுக்க... மேலும் பார்க்க