செய்திகள் :

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்!

post image

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோவில் பயணிக்க முதலில் 'சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை'(CMRL) வழங்கப்பட்டது.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயிலில் ஒருங்கிணைந்து பயணிக்கக்கூடிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை ரீசார்ஜ் செய்வது படிப்படியாக நிறுத்தப்பட்டது.

அதன்படி சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பழைய சிஎம்ஆர்எல் பயண அட்டை ரீசார்ஜ் நேற்றுடன் நிறுத்தப்பட்டது.

இன்று(ஆக. 1) முதல் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையான 'சிங்கார சென்னை' அட்டையைப் பயன்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பழைய சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையைக் கொடுத்துவிட்டு புதிய பயண அட்டையை கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதில் உள்ள தொகையும் புதிய அட்டைக்கு மாற்றி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை, க்யூஆர் கோடு மூலமாகவும் பயணசீட்டு பெற்று பயணிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

From today can travel on the Chennai Metro only with the new 'Singara Chennai' or National Common Mobility Card.

இதையும் படிக்க |வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க