செய்திகள் :

ஆணவப் படுகொலை: கவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் - அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

post image

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் குமாரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகளும் காதலித்து வந்த நிலையில், அவரின் சகோதரர் சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கவினை ஆணவப் படுகொலை செய்தார்.

இந்த விவகாரத்தில், சுர்ஜித் கைதுசெய்யபட்டதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரின் பெற்றோரும் கைதுசெய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்திய கவினின் பெற்றோர், நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து தனது மகனின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

கவின் குமார்
கவின் குமார்

அதைத்தொடர்ந்து, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.

அதேசமயம், எஃப்.ஐ.ஆரில் சுர்ஜித் மற்றும் அவரின் பெற்றோரின் பெயர் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் கிருஷ்ணவேணி கைதுசெய்யப்படவில்லை.

இதற்கிடையில், தானும் கவினும் உண்மையாகக் காதலித்ததாகவும், தன்னுடைய அப்பா அம்மாவுக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் திடீரென வீடியோ வெளியிட்டார் அப்பெண்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் இன்று (ஆகஸ்ட் 1) காலையில் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்ட கவினின் உடல், பிற்பகல் 12 மணியளவில் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கவின் உடலுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க

சென்னை: இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது; என்ன நடந்தது?

சென்னை, வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் ஊபர் மூலம் பைக்... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

40 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தொழிலாளி படுகொலை; புரோட்டாவிற்கு சால்ணா கேட்டதால் தகராறா? -போலீஸ் தீவிர விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம் (49). மீனவரான இவர் அவ்வப்போது பல்வேறு கூலி வேலைகளும் செய்து வருபவர். கடந்த சில நாள்களுக்கு முன் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வ... மேலும் பார்க்க

நெல்லை: ”விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” – கனிமொழி MP

திருநெல்வேலியில் கடந்த 27-ம் தேதி ஐ.டி ஊழியரான கவின்குமார் ஆணவக் கொலைவின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இந்தக்... மேலும் பார்க்க