செய்திகள் :

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

post image

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமேஷ்வர் மஹ்தோ. இவர், கடந்த 12 ஆண்டுகளாக, குவைத் நாட்டில் தொழிலாளியாக வேலைச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த 45 நாள்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி பிரமிலா தேவி தனது கணவரின் உடலைத் தாயகம் கொண்டு வரவேண்டுமென மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளிகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தற்போது வெளியான அறிக்கையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு வரவேண்டிய தொகை அனைத்தும் கிடைக்காமல், அவரது உடலை வாங்க மாட்டோம் என மறுத்து வந்ததால், இந்த நடவடிக்கைகள் தாமதமானதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின், குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று முறையாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து, அவரது உடல் இன்று (ஜூலை 31) மாலை 3.45 மணியளவில் பிர்சா முண்டா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

The body of a Jharkhand worker who died in Kuwait has been brought back home after 45 days, it has been reported.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க