செய்திகள் :

துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப்பு!

post image

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான அம்பிகாபதி படத்தினை ஏஐ உதவியால் மாற்றி வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்து அந்தப் பட இயக்குநர் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.

ஹிந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியினால் மாற்றப்பட்டு இன்று (ஆக.1) வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் முதல் படக்குழு வரை இந்த மாற்றத்துக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் படத்தினை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவினை எழுதியுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

அக்கறையின்றி மாற்றம்

கடந்த 3 வாரமாக நம்பமுடியாத, மிகவும் வருத்தங்கூடிய சம்பவங்கள் நடந்தன.

என்னுடைய சம்மதம் இல்லாமல் ராஞ்சனா எனும் படத்தை பொறுப்பில்லாமல் மாற்றி மறுவெளியிட்டுள்ளார்கள். இதில், கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் அக்கறையே இன்றி பொறுப்பில்லாமல் இதை செய்துள்ளார்கள்.

இந்த விஷயங்களுக்கு மத்தியில் திரைத்துறை, ரசிகர்களிடமிருந்து மிகுந்த ஆதரவும் கிடைத்தது ஆறுதலாக இருந்தது. இந்தப் படம் அவர்களுக்கு முக்கியமானது என்ற உண்மையை வெளிப்படுத்தியது. அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

இது புகழலஞ்சலி கிடையாது

மீண்டும் இதை தெளிவுப்படுத்துகிறேன்: ஏஐ-ஆல் மாற்றியதை நான் ஆதரவிக்கவில்லை. அதில் எனக்கும் படத்தை உருவாக்கிய குழுவுக்கும் எந்தப் பங்குமில்லை.

இது வெறுமனே படம் கிடையாது. இது மனிதர்களின் கைகளில் உருவாக்கப்பட்டது. அதில் தவறுகள், மனித உணர்வுகள் அடங்கியிருக்கும்.

தற்போது வந்திருப்பது புகழ் அஞ்சலி கிடையாது. நோக்கம், ஆன்மாவுடன் உருவாகிய ஒன்றை அஜாக்கிரதையாக கைப்பற்றி மாற்றியுள்ளார்கள்.

புதுமையல்ல, அவமானம்

எங்களது ஐடியாவை ஒரு இயந்திரத்தால் மாற்றுவது புதுமை கிடையாது. அது ஆழ்ந்த அவமானம்.

எங்களது அனுமதி இல்லாமல் படத்தின் உணர்வலையின் மீது தொப்பியை வந்து போர்த்துவதுபோல செய்வது கலைப்படைப்பாக மாறாது. நாங்கள் உருவாக்கியதன் மீதான துரோகம் இது.

இந்தப் படத்துக்கு உயிர்கொடுத்த அனைவரது சார்பாக நான் பேசுகிறேன். தற்போது மாற்றப்பட்டு வெளியாகியிருக்கும் இந்தப் படம் நாம் யார் என்பதை மாற்றாது. நாங்கள் உருவாக்கிய படத்தின் உணர்வை இந்தப் படம் எடுத்துச்செல்லவில்லை எனக் கூறியுள்ளார்.

The director of the film Ambikapathi, starring actor Dhanush, has expressed his dissatisfaction with the production company that has re-released the film with the help of AI.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

ஜவான் படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷாருக் கான் குறித்து இயக்குநர் அட்லீ நீண்டதாக காதல் கடிதம் போல நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் முதல்முதலாக ஜவான் படத்தின்மூல... மேலும் பார்க்க

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

நடிகர் சசிகுமார் நடிப்பில் 2023-இல் வெளியான அயோத்தி படம் ஒரு தேசிய விருதுகூட பெறாதது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படம் தமிழில் மிகு... மேலும் பார்க்க

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

ஆடுஜீவிதம் திரைப்படம் எதனால் தேசிய விருது பெறவில்லை தேர்வுக்குழுமை சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே ... மேலும் பார்க்க

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் (வாத்தி படத்துக்காக) விருது பெற்றுள்ளார்.இரண்டாவது முறையாக தேசிய விருத... மேலும் பார்க்க