செய்திகள் :

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

post image

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.

ஆனால், இன்று காலையிலேயே முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின்போதே இருவரும் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களுடன் பேசுகையில், அரசியலில் எனக்கென்று தனி சுயமரியாதை உண்டு. அம்மாவின் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) நேரடி கண்காணிப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றியவன் நான். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

தேர்தலில் ஒன்றுசேர்ந்த பாஜக - அதிமுகவுக்கு வாழ்த்துகள்; பிரதமர் மோடியுடன் கூட்டணிவைத்த எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்துகள். தமிழகத்துக்கு கல்வி நிதி தராத பாஜக அரசின் மீது வருத்தம்தான் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, தவெகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி தொடர்பாக தவெகவும் பேசவில்லை, தானும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

Former CM OPS at CM Stalin's home

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்!

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருக... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத... மேலும் பார்க்க

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ம... மேலும் பார்க்க

4 வயது சிறுவனைக் கவ்விச் சென்ற புலி: வால்பாறையில் அதிர்ச்சி!

வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனின் தலையைப் புலி கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்த... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப... மேலும் பார்க்க

கவின் உடல் ஒப்படைப்பு! இன்று தகனம்!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடல் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க