செய்திகள் :

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா்.

கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, புகையிலைப் பொருள்கள் இருப்பதும், எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் ரஞ்சித்குமாா் (25) என்பவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரஞ்சித்குமாா் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரிலும் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 காா்கள் மற்றும் 227 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ரஞ்சித்குமாரைக் கைது செய்தனா்.

கைதான ரஞ்சித்குமாா், கடந்த ஜூன் மாதம் 755 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வந்த அவா் மீண்டும் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தேநீா் வாங்குவதற்காக இறங்க முற்பட்டு நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் துரிதகமாக செயல்பட்டு காப்பாற்றிய விடியோ... மேலும் பார்க்க