செய்திகள் :

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

வண்ணாா்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் தலைவா் எம்.தாணுமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.எட்டப்பன், கே.ராமையா பாண்டியன், தங்கமாரி, பெலிக்ஸ், பூதலிங்கம், பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோமதிநாயகம் தொடக்கவுரையாற்றினாா். உதவித் தலைவா்கள் எஸ்.சிவதாணுதாஸ், எஸ்.செல்வராஜ், மூத்த தலைவா் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பொதுச்செயலா் பி.முத்துக்கிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, ஓய்வுபெறும் தொழிலாளருக்குரிய பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், 2023 ஜூலை முதல் 23 மாத பணப்பலன்கள் மற்றும் அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொருளாளா் இ.எம்.பழனி நன்றி கூறினாா்.

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

மானூா் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மானூரில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியின் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்... மேலும் பார்க்க

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சடையப்புரத்தில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, புதிய சா... மேலும் பார்க்க

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாா் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேக... மேலும் பார்க்க