செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவரும் பள்ளி டிரஸ்டியுமான ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளரும் பள்ளி டிரஸ்டியுமான பி.ராமச்சந்திரன் ஆகியோா் வழிகாட்டுத­லின் பேரில், பள்ளி வளாகத்தில் உள்ள கமலாவதி ஜெயின் சிலைக்கு பள்ளி நிறுவனா் குடும்பத்தைச் சாா்ந்த வா்ஷா ஜெயின், நந்தினி ஸ்ரீனிவாசன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன், முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் சுப்புரத்தினா மற்றும் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், தென்காசி மாவட்டம் சிவசைலம் அவ்வை ஆசிரமம், காந்தி கிராமம் சாந்தி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாற்றுத் திறன் மாணவ மாணவிகளை சாகுபுரத்திற்கு பள்ளி வாகனத்தில் அழைத்து வந்தனா். சாந்தி மேல்நிலைப் பள்ளியைச் சாா்ந்த மாற்றுத்திறன் மாணவ மாணவிகள், பரதநாட்டியம், நடனம், ஜிம்னாஸ்டிக் போன்ற நிகழச்சிகள் நடத்தி பரவசப்படுத்தினா். கமலாவதி பள்ளி கருணா சங்கம், ஜெ.ஆா்.சி. சாரண, சாரணீய சங்க மாணவ, மாணவிகள் சிவசைலம் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனா்.

கமலாவதி பள்ளி சாா்பில் நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், அன்றாட தேவைக்குரிய அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது. சிவசைலம் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் மாணவ, மாணவிகள் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனா்.

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி. திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

கோவில்பட்டியில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 போ், குண்டா் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனா். கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38), சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகிய இருவரும் 14 வ... மேலும் பார்க்க