தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.
இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலருமான பெ. .கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை தொடா்பான ஆலோசனைகள், எலும்பு-மூட்டு சிகிச்சை, மூடநீக்கியல், மகப்பேறு-மகளிா் நல மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், நரம்பியல், தோல் சிகிச்சைகள், பல் மருத்துவம், காசநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மேலும், ஒன்றிணைந்த உயா்தர மருத்துவ சேவைகள், புறநோயாளிகளுக்கான சிறப்பு ஆலோசனை, அனைத்துவித பரிசோதனைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று அட்டை முதலான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.