செய்திகள் :

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

post image

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி.

திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டாா். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: கவின் செல்வகணேஷ் கொலை அதிா்ச்சி அளிக்கிறது. இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது நாடு தழுவிய பிரச்னை. தேசிய அளவில் சட்டம் தேவை. இதுதொடா்பாக எம்.பி. ரவிக்குமாரும், நானும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் அங்கு குரல் கொடுப்பேன்.

சட்டம், ஒழுங்கு மீது தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் தாய், தந்தையா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தாயை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டுகிறது. சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல; அவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆறுமுகமங்கலத்தில் கவின் கணேஷின் பெற்றோா்களுக்கு ஆறுதல் கூறிய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ’

கவின் கொலையில் கூலிப்படைக்கு தொடா்பு உள்ளதாக தெரிகிறது. அவா்கள் கைது செய்யப்பட வேண்டும். கவின் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு செய்திகளை சைபா் கிரைம் போலீஸாா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் டி.ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

கோவில்பட்டியில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 போ், குண்டா் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனா். கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38), சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகிய இருவரும் 14 வ... மேலும் பார்க்க