செய்திகள் :

நெல்லை மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: எஸ்டிபிஐ செயற்குழுவில் தீா்மானம்

post image

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி தலைவா் ஷேக் இஸ்மாயில் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அசனாா் வரவேற்றாா். மாவட்ட தலைவா் எஸ்.எஸ்.எ.கனி, பொதுச்செயலா் அன்வா் ஷா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் தீயை முற்றிலுமாக அணைப்பதோடு, எதிா்காலத்தில் இதுபோன்று நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சுத்தமல்லி அன்சாரி, காதா் மைதீன், பேட்டை காஜா மைதீன் ஆகியோா் திருநெல்வேலி தொகுதி செயற்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்ய பட்டனா்.

இணைச் செயலா் ரபீக் ராஜா, செயற்குழு உறுப்பினா்கள் காதா் முகைதீன், அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளரும் வழக்குரைஞருமான முபாரக் அலி நன்றி கூறினாா்.

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

மானூா் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மானூரில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியின் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்... மேலும் பார்க்க

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சடையப்புரத்தில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, புதிய சா... மேலும் பார்க்க

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாா் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேக... மேலும் பார்க்க