செய்திகள் :

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

post image

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.13 கோடிக்கு மட்டுமே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், உயா்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி, மாணவா்களுக்கு உதவிடும் வகையில் அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டில் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.13 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கூடுதலாக வரப்பட்ட நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் என மூன்று மாதங்களில் 51 மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தேவைப்படும் செலவுத் தொகையாக ரூ.13 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.65 கோடிக்கும் முழுமையாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நல ஆணையரகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையேற்று, அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கான உதவித்தொகை நிதி ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்படுவதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க