செய்திகள் :

பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி

post image

வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன.

வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகே வேகமாக வந்த ஒரு சரக்கு வேன் திடீரென நிலைதடுமாறி சாலையோர மின் கம்பம் மற்றும் மின்மாற்றி மீது மோதியது. இதில் மின்மாற்றி மற்றும் வேன் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உடனடியாக வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, தீயணைப்பு வீரா்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் மின்மாற்றி மற்றும் சரக்கு வேனின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. சரக்கு வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

விசாரணையில், ஈரோடு லக்காபுரம் கருப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த சரக்கு வேன் ஓட்டுநா் இன்ஷாபுதீன் (53), பட்டுக்கோட்டையிலிருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிக் கொண்டு திருப்பூா் மங்கலத்துக்கு சென்று கொண்டிருந்ததும், அசதியில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

பெட்ரோல் பங்க் அருகே தீப்பற்றிய நிலையில், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், காவல் துறை, மின் வாரியம், தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையாலும் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தாராபுரத்தில் வழக்குரைஞா் வெட்டி கொலை: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னா

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முரு... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.இ... மேலும் பார்க்க

கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம் கே. பரமத்தி மோளபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கலை நிலவன் (23)... மேலும் பார்க்க

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: 5 நாள்கள் ஒலிபெருக்கி அறிவிப்புக்குப் பிறகு நடவடிக்கை

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க