செய்திகள் :

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

post image

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தில்லி சதார் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது, 11 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் மூவர் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். ஆன்லைன் கேமில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வாஹித் என்பவருடன் நண்பர்களாகி உள்ளனர்.

இந்த நிலையில், மும்பையில் நட்சத்திரங்களைச் சந்தித்ததாகவும் உங்களையும் சந்திக்க வைக்க முடியும் என வாஹித் கூறியதை அடுத்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் மூன்று சிறுவர்களும் ஜூலை 25 ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தேடுதல் பணியைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினர் சிறுவர்களை தேடுவதை அறிந்த வாஹித், சிறுவர்களுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். இதையடுத்து, சிறுவர்கள் தங்களின் திட்டத்தை மாற்றிக் கொண்டு நாசிக் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

கண்டுபிடித்தது எப்படி?

முதல்கட்ட விசாரணையில், சிறுவர்கள் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ஜல்னாவைச் சேர்ந்த வாஹித் என்பரைக் காணச் செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஜ்மேரி கேட் நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர். பின்னர், புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் சென்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.

சிறுவர்கள் சென்ற நேரத்தைக் கணக்கிட்டு, சச்கண்ட் விரைவு ரயில் மூலம் மும்பை சென்றிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், ரயில்வே காவல்துறையுடன் இணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.

ஜல்னாவில் உள்ள வாஹித் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனிடையே, சிறுவன் ஒருவன் உபயோகித்த செல்போன் எண்ணைக் கண்டறிந்த காவலர்கள், அதனை வைத்து நாசிக் ரயில் நிலையத்தில் இருப்பதை உறுதி செய்து பிடித்துள்ளனர்.

Three boys from Delhi have secretly gone to Mumbai to meet Salman Khan.

இதையும் படிக்க : மோடி வாய் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொ... மேலும் பார்க்க