செய்திகள் :

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

post image

பவானியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் கனரக வாகனங்களை புறவழிச் சாலையில் செல்ல போலீஸாா் அறிவுறுத்த வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாமக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எ.ஜெகதீசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

பவானியில் இருந்து மேட்டூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதாலும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலாலும் பள்ளிக் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

எனவே பவானியில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக லட்சுமி நகரில் இருந்து குருப்பநாயக்கன்பாளையம் வரை போடப்பட்டுள்ள புறவழிச் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல போலீஸாா் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க