செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்ட விரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது, பாஜகவின் வெற்றியை கருத்தில் கொண்டு, பலரின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கை என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தின் மகர வாயில் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் பங்கேற்று, தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை நிறுத்தக் கோரும் பெரிய பதாகை மற்றும் வாசக அட்டைகளை அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா்.

Image Caption

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினா்.

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க