செய்திகள் :

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

post image

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் நிலை 1, ரூ.15,700-50000 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.4800-ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1300) எனும் சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான அனைத்துப் படிகளுடன் கூடிய அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும்;

நிலை – 15, ரூ.36200 – 114800 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4500) எனும் சம்பளத்திலமைந்த தொகுப்பாளர் பணியிடம் ஒன்றும் நிரப்பப்படவுள்ளன.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA-Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு ‘ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர்’ (Scheduled Caste - Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள  விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி  எட்டாம் வகுப்பு தேர்ச்சி (VIII Std. Passed) தொகுப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் எம்.ஏ.). அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37.

தமிழக அரசின் நடைமுறையிலுள்ள  விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தினை ஒட்டி தன்விவரக் குறிப்புடன் பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைத் தற்சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து 16.08.2025ஆம் நாள் மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, “இயக்குநர் (முகூபொ), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-29520509 என்னும் தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தெய்வீக அனிமேஷன்: ரூ.53 கோடி வசூலித்த மகாவதாரம் நரசிம்மா!

Applications are invited from eligible candidates for the vacant posts in the Directorate of Ancient Tamil Etymology Database, which operates under the Department of Tamil Development and Information.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க