செய்திகள் :

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

post image

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்க சைபர் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், குற்றங்களும் அதனால் இழப்புகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில், சைபர் குற்றங்கள் குறித்து தில்லியில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டில் மட்டும் சைபர் மற்றும் மோசடி குற்றங்களால் ரூ. 22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இது 2023-ல் நிகழ்த்தப்பட்ட ரூ. 7,465 கோடியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்; 2022-ல் ரூ. 2,306 கோடியைவிட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் ரூ. 1.2 லட்சம் கோடிக்குமேல் இந்தியர்கள் இழப்பர் என்றும் கணித்துள்ளனர்.

2023-ல் சுமார் 15.6 லட்சமாக இருந்த சைபர் குற்றம் தொடர்பான புகார்கள், 2024-ல் 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

2024, ஜனவரி மாதத்தில் மட்டும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் தளங்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சைபர் புகார்களின் எண்ணிக்கை 15,000. அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரியில் 14,000 மற்றும் மார்ச்சில் 15,000 புகார்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

Digital Fraud, Cybercriminals Stole Rs 23,000 Crore From Indians In 2024

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க