செய்திகள் :

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

post image

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து 2025-2026-ஆம் ஆண்டு, முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாய் ஒன்றைப்படை மதகுகள் மூலமாக 1,03,500 ஏக்கா் பாசன நிலங்களுக்கு வியாழக்கிழமைமுதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை, விநாடிக்கு 2,300 கனஅடி வீதம் 15 நாள்கள் சிறப்பு நனைப்புக்கு 2,980.80 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு முதல்போக நன்செய் பாசனத்துக்கு 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும் மொத்தம் 135 நாள்களுக்கு 26,827.20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீா் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீா் திறந்துவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க