செய்திகள் :

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

post image

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை, சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சுமார் நான்கு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவின் பேரில் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்து கைது செய்தனர்

பின்னர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பாபுஜி (28) என்பதும் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.

இதையும் படிக்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Railway Protection Force police have arrested a youth who was involved in snatching a gold chain from a woman sitting at the Thiruvanmiyur railway station.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா... மேலும் பார்க்க

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க